கூரான உன் கருவிழியை காணும் கணமே வாய் குழைகிறேன், ஆழப்பார்வையில் அடுத்த நொடி உறைகிறேன், உன் கள்ள சிரிப்பபோடு முளைக்கும் கன்னக் குழியில் தடுமாறுகிறேன், மாறிக்கொண்டே இருக்கும் முகமொழிகளை விரல் விட்டு எண்ணுகிறேன், உன் சம்பாஷனைகள் எனை ஈர்க்காதது போல் நடிக்கிறேன், எதார்தமாய் உன்னை பார்க்க முயன்று தோற்க்கிறேன்.
கேள் சகியே,
உன் அண்மையில் என் சமநிலையை சரிபாதி இழக்கிறேன்
கேள் சகியே,
உன் அண்மையில் என் சமநிலையை சரிபாதி இழக்கிறேன்
No comments:
Post a Comment